முகப்பு /தென்காசி /

515 டூவீலர்களை ஏலம் விடும் தென்காசி காவல்துறை.. இதில் எப்படி கலந்துகொள்வது? முழு விவரம்

515 டூவீலர்களை ஏலம் விடும் தென்காசி காவல்துறை.. இதில் எப்படி கலந்துகொள்வது? முழு விவரம்

515 டூவீலர்கள் ஏலம்

515 டூவீலர்கள் ஏலம்

Tenkasi Police | தென்காசி மாவட்டத்தில் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் இருந்துவரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம் விடப்படுகிறது.

13.02.2023, 14.02.2023 மற்றும் 15.02.2023 ஆகிய 3 தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் இன்று(06.02.2023) முதல் 10.02.2023 வரையிலான 5 நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை நேரில் பார்வையிடலாம்,

மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூபாய் 3000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளவேண்டும் டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையுடன் ஜிஎஸ்டி தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும். இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tenkasi