இந்தியாவில் கொரோனாவின் புதிய வைரஸான BF 7 மற்றும் BA 5 போன்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து தொற்று பரவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மலையிலிருந்து மூலிகைகள் கலந்து வரும் அருவிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது இதில் குளித்தால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த பகுதி மக்களிடம் கொரோனா தொற்று பரவுவதில் அச்சத்தில் இருக்கின்றனர்
கொரோனா தொற்று காலத்தில் குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் சீசன் நேரத்திலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தங்களது வியாபாரம் பெரிதளவு நஷ்டத்தில் ஓடியது என்று குற்றாலத்தின் அருகில் கடைவைத்திருக்கும் சிறுவியாபாரிகள்தெரிவித்தனர்.
அதேபோல் தற்போதும் கொரோனா மீண்டும் வந்தால் பெரும் நஷ்டம் தான் ஏற்படும் என்று வருத்தம் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Courtallam, Local News, Tenkasi