1.5 அடி அதிசயம்... இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவிவருகிறது. மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கேற்ப தென்காசி அனுமந்தபுரியில் 1.5 அடியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
தென்காசி மாவட்டம் அனுமந்தபுரி என்ற பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.
மேலும் இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி அன்றும், மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்றும் மிக விமர்சியாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அனைத்து நாட்களிலும் கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலையில் பூஜையும் நடைபெறும். சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி அளவில் சிறப்பு பூஜைகள் அன்னதானமும் வழங்கப்படும்.
கடத்தப்பட்ட மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..? காதல் கணவர் கதறல்.. தென்காசியில் பரபரப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi