முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலை குளிர்வித்த சாரல் மழை...! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

சங்கரன்கோவிலை குளிர்வித்த சாரல் மழை...! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

X
மாதிரி

மாதிரி படம்

Tenkasi News | வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் தென்காசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. குற்றால அருவிகளில் நீர்வற்றிய நிலையில் வெறும் பாறைகள் மட்டுமே பார்க்க முடிந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வற்றிய நிலையில் இருந்த போதிலும் மெயின் அருவியில் மற்றும் சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், தற்போது சங்கரன்கோவிலில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. மேக மூட்டத்துடன் காணப்படும் சங்கரன்கோவிலில் சாயங்காலம் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் பகுதியில் தற்போது சில்லென்று காற்று வீசி சாரல் மழையும் பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுட சுட டீ மற்றும் பஜ்ஜி ஆகியவற்றை மக்கள் தேடத் தொடங்கினர்.

First published:

Tags: Local News, Tenkasi