பள்ளியில் தரமான வகுப்புகள் கட்டப்படுவது குறித்து சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா பேசியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் அமைந்திருக்கும் கூவாச்சிபட்டி கிராம உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு பேசுகையில், ” பெற்றோர்கள், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் இனிமேல் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை வராது என்றும் அதற்காக அரசு சுமார் 2 கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது என்றும் இனிமேல் மாணவர்கள் மரத்தடியில் கல்வி கற்கும் நிலை வராது என்றும் உறுதி அளித்துள்ளார். பின்னர் பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi