தென்காசி மாவட்டத்தில் சாலைபாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலுதலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலைபாதுகாப்பு குழு உறுப்பினர்கள், ஓட்டுநர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த சிறந்த ஓட்டுநர்கள், சிறந்த அவசரகால ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள், சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டி, பொன் மொழிகள் போட்டி, பாடல் போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டது.
மேலும், ஆய்வு கூட்டத்தில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினர்.
இந்த ஆய்வுகூட்டத்தில் பொதுப்பணிகள் சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ வேலு பேசியது,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாலைபாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகைத் தருவதால் சாலைபாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கள் பல்வேறு காரணங்களால் நடைப்பெறுகிறது.
அதிக வேகம், கவனக் குறைவு, சாலை ஆக்கிரமிப்பு, அதிக பாரம் சுமந்து செல்லுதல், பாதுகாப்பு உபகரனங்கள் பயன்படுத்தாமை, கைபேசி உபயோகித்தல், தவறான பாதையில் செல்லுதல், சுற்றி திரியும் கால் நடைகள் உள்ளிட்ட காரணங்களால் விபத்து ஏற்படுகிறது. சாலை விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் விழிப்புனார்வு ஏற்ப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளில் விபத்துகளை தடுக்க தரமான சாலைபாதுகாப்பு குறியீடுகள் அமைக்கப்பட வேண்டும். வேகத் தடைகளில் சரியாக வர்ணம் பூசப்பட வேண்டும்.
பழுதடைந்த சாலைகள் உடனுக்குடன் சீரமைக்கப்பட வேண்டும். ஒப்பந்த தாரர்கள் முறையாக தரமாக பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். பாலங்கள் அமைத்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளும் போது ஒளிரும் வழியடைப்பு மற்றும 'ஒளிரும் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அரசு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லுாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில்வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்ததாவது, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சாலையாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பிற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். சாலை சரியாக இருந்தாலும் பாதுகாப்பு விதி முறைகளை நாம் சரியாக கடைப்பிடிக்க வோண்டும். தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் குற்றாலா சீசன் மற்றும் திருவிழா காலங்களில் அதிகளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது அதனை தவிர்க்க சுற்றுச்சாலை அமைக்கப்பட வேண்டும். சாலையாதுகாப்பை முக்கிய பணியாக கருதி செயல்பட வேண்டும். சாலைபாதுகாப்பு நமது பொறுப்பு என தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வு கூட்டத்தில் தென்காசி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Road Safety, Tenkasi