முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவில் பள்ளியில் விமர்சையாக கொண்டாடப்பட்ட குடியரசு தினம்.

சங்கரன்கோவில் பள்ளியில் விமர்சையாக கொண்டாடப்பட்ட குடியரசு தினம்.

X
பள்ளி

பள்ளி கொடியேற்றம்

Tenkasi | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கோமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்களும் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அதேபோல, ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர்கள் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல நாடு முழுவதும் பள்ளிகளிலும் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கோமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. செஞ்சிலுவை சங்க மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை தலைமை ஆசிரியர் பழனி செல்வம் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் மூவர்ண கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

குடியரசு தின விழாவையொட்டி பள்ளியில் கோலப்போட்டி  - வண்ணக் கோலங்கள் போட்டு அசத்திய மாணவிகள்

மேலும் தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகள் 13 பேருக்கு குடியரசு தின விழாவில் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Tenkasi