தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா திடலில் நடந்த இந்த சிறப்பு தொழுகையை அசரத் முகமது ரபீக் நடத்தினார். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், சங்கரன் கோவில் கழுகுமலை சாலை பள்ளிவாசலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. அத்துடன், அன்பை பகலும் விதமாக ரம்ஜான் பிரியாணியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi