தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டத்தில் நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் நினைவு திருமண மண்டபம் உள்ளது.
இந்த திருமண மண்டபமானது வாசுதேவநல்லூர் யூனியனுக்கு கீழ் அமைந்திருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.5,000 வீதம் திருமணம் நடத்துபவர்களிடமிருந்து வாசுதேவநல்லூர் யூனியனுக்கு செலுத்த வேண்டும்.
ஆனால் இந்த திருமண மண்டபம் சரியான பராமரிப்பின்றி பாழடைந்து இடிந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த திருமண மண்டபத்திற்கு வருபவர்கள் இங்கு கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
வெளியூரில் இருந்து இந்த மண்டபத்தை பயன்படுத்துபவர்களுக்கு கழிப்பறை சுத்தமாக இல்லாதது பெரும் சிக்கலாக இருக்கிறது. மேலும் இந்த மண்டபத்தில் அமைந்திருக்கும் சுவர்கள் மற்றும் மேல் தளங்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது.
ரூ.2,000 மட்டுமே மாதச் சம்பளம்... வேதனையில் பூலித் தேவன் மாளிகை காவலாளி
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi