தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்த்தவர் கனகலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவருக்கு கூடைபந்து மீது தீராத காதல் வந்தது. அதன் பின்னர் தன்னுடைய உடல்இயலாமையையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே கூடைபந்து பயிற்சி எடுத்தார்.
கடின உழைப்பும், விடா முயற்சியும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. சக்கர நாற்காலி கூடைபந்து போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக மாநில அளவில் வளம் வர தொடங்கினார்.
மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளின் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்தார். சென்னை, டெல்லி, ஐதரபாத், ஈரோடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை தவறாது வென்றார்.
இதையும் படிங்க : தென்காசி மாவட்டத்தில் நாளை (3.12.2022) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற இவரது சாதனையை பாராட்டி தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கனகலட்சுமியை பாராட்டினார். சாதனைகள் தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sports, Tenkasi