சமீப காலத்தில் மக்கள் மத்தியில் பீட்சா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் பீட்சா மிகவும் கவர்ந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆர்டிஓ ஆபீஸ்க்கு அருகில் இருக்கும் ஈட் ஸீ ரெஸ்டாரண்ட்டில் சிக்கன் பீட்சாவில் அதிகமான அளவில் சீர்களை தூவி பார்ப்பவர்களுக்கு எச்சில் வரும் வகையில் தயார் செய்கின்றனர். அதன் தயாரிப்பு முறைகளை தெரிந்துகொள்வோம்.
பிட்ஸா பேசில் முதலில் ஈட் ஸீ ரெஸ்டாரண்ட்டில் பிரத்யேகமான சாஸ் தடவுகின்றனர். அதற்கு மேலே வெங்காயம், பிச்சுப்போட்ட சிக்கன், சிக்கன் பீசா என்பதால் சிக்கனுக்கு குறைவே இல்லாதவாகையில் அதிகமான சிக்கன் பீஸ்களை வைக்கின்றனர். அதற்கு மேல் சீஸ்களை எக்கச்சக்கமாக தூவுகின்றனர்.
சிலம்பம் சுற்றி அசரடித்த சங்கரன்கோயில் எம்.எல்.ஏ.. பொங்கல் விழாவில் சுவாரஸ்யம்!
அதன்மேல் குடைமிளகாயை வரிசையாக அடுக்குகின்றனர். பீசாவிற்கான ஆரிகனோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் தூவிய பின்னர் அவனில் வைத்து சமைத்து சுடச்சுட நம் தட்டிற்கு வருகிறது.
செய்தியாளர்: சுப கோமதி, தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi