கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் 47 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தகவல் பரிமாற்றத்தில் முதன்மையாக வாட்ஸ் அப் செயலி பயன்பாடு இருந்து வருகிறது. மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ் அப் உபயோகத்திற்கு என்று சில கட்டுப்பாடுகளை வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விதிமுறைகளை மீறும் பயனர்களில் கணக்குகள் நீக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிப்ரவரி மாதம் 45 லட்சம் கணக்குகளும், ஜனவரி மாதம் 29 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மார்ச் 1-ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 47,15,906 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : ஏசி ஓடிக்கொண்டே இருந்தாலும் EB பில் கம்மியா வரணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!
வாட்ஸ் அப்பின் விதிகளைப் பின்பற்றாததால் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், மார்ச் மாதத்தில் கணக்குகளை முடக்கக்கோரி 4,720 பயனர்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டதாகவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Meta, Technology, WhatsApp