முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சுட்டெரிக்கும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் 13-ம் தேதிவரை இப்படித்தான் இருக்குமா? - வானிலை மையம் கொடுத்த அப்டேட்

சுட்டெரிக்கும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் 13-ம் தேதிவரை இப்படித்தான் இருக்குமா? - வானிலை மையம் கொடுத்த அப்டேட்

வெயில்

வெயில்

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் மற்றும் வட தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 9-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

10-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  வரை பெய்யக்கூடும்.

11 முதல் 13-ம் தேதி வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பாபநாசம் (திருநெல்வேலி) 2, செங்கோட்டை (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil