முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கமா? மக்களைத் திரட்டி போராடுவேன்... விஜயகாந்த் ஆவேசம்

டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கமா? மக்களைத் திரட்டி போராடுவேன்... விஜயகாந்த் ஆவேசம்

விஜயகாந்த் (கோப்பு படம்)

விஜயகாந்த் (கோப்பு படம்)

டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான அறிவிப்புக்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல உள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்கெனவே, வறட்சி, மழை நீரில் மூழ்கி விளை நிலங்கள் சேதம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும். மேலும், விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும். விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

top videos

    எனவே, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தே.மு.தி.க தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Vijayakanth