அரசுப் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தசூழலில் நெல்லை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 23ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிபந்தனையால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்குவமாக எடுத்துரைத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.