முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வருமான வரித்துறை சோதனை... பாதுகாப்பு வழங்கத் தவறிய எஸ்.பி மீது நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை

வருமான வரித்துறை சோதனை... பாதுகாப்பு வழங்கத் தவறிய எஸ்.பி மீது நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக  சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது,  காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil nadu, India

வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீதும் வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும்  அவர்களின் நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்  சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான  வரித்துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும்  சேதப்படுத்தியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழகக் காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?

சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள்,  சொத்து விவரங்கள் பணம்  மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

இதையும் வாசிக்க:  குடியரசுத் தலைவர் பதவி தகுதியற்றதாக ஆகிவிட்டதா...? முரசொலி விமர்சனம்..!

top videos

    வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Annamalai