சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்பை காக்கவே நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள், மக்களிடம் தவறாக சென்று சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, அனைத்து நடவடிக்கைகளும் நேரலை செய்யப்படவில்லை என விளக்கம் அளித்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க; IPL 2023 : சி.எஸ்.கே. மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்...
பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை இருட்டடிப்பு செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டினார். சநாயகருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும் முடிவெடுக்காமல் இருப்பதாக கூறினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Assembly