வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 14 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், நடப்பு நிதியாண்டில் இதுவரை 12 ஆயிரத்து 648 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டு சராசரியை விட 89 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவித்தார். ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயிரத்து 500 கோடி அளவில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், நெல் கொள்முதல் செய்ய, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு 75 கூடுதலாக ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முழுவதும் வேளாண் இயந்திரங்கள் தடையின்றி கிடைக்க, இ-வாடகை செயலியுடன் இணைந்து விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, TN Budget 2023