முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

Weather update | சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

top videos

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகப்பட்சம் 34 டிகிரி செல்சியசும் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் அதிகபட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    First published:

    Tags: Heavy rain, MET warning, Weather News in Tamil