தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து, இயல்பை விடவும் வெப்பம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, சமீபத்தில் வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாகி வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்ற போது, காற்றில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து விட்டது. தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வறண்ட காற்று வீசிக்கொண்டிருப்பதால் கடந்த 2-3 தினங்களாக வெப்பநிலை உயர்ந்துகொண்டு இயல்பை விடவும் அதிகமாகப் பதிவாகி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், வேலூரில் 42.3 டிகிரி செல்ஸியஸ் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, கரூர், வேலூர், கடலூர், ஈரோடு திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாகப் பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது ஈரப்பதம் குறைந்திருக்கிற நேரத்தில், வறண்ட காற்றும் வீசுவதால், வெப்ப அழுத்தம் (Heat Stress) ஏற்படுவதால், அசௌகரியமான சூழல் (Discomfort weather) ஏற்படும். இதற்கு முன்னர் கடந்த 2003யில் சென்னையில் வெப்பம் 45 டிகிரி வரை உயர்ந்துள்ளது. தற்போது 41-42 டிகிரி அளவிலேயே உள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரைக் கடற்காற்றும் இருப்பதால், அதன் வேகத்தைப் பொறுத்தே இன்னும் இந்த வெப்பம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்க முடியும். மேலும் தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விடவும் 2-4 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும் புறநகர்ப் பகுதிகளில் இதைவிட சற்று அதிகமாகவும் பதிவாகும்.
கடந்த வாரம் கோடை மழை தமிழகத்தில் பரவலாகப் பெய்தது. ஆனால் இனி வறண்ட வானிலையே தொடரும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heat Wave, MET warning, Summer, Weather News in Tamil