விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விளாம்பட்டி பகுதியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பட்டாசுக்கு மருந்து செலுத்திக் கொண்டிருந்தபோது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அறை வெடித்து தரைமட்டமான இந்த கோர விபத்தில், கருப்பசாமி, தங்கவேல் ஆகிய இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த கருப்பம்மாள் எனும் பெண், காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார். அதேபோல காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Sivakasi