போர் தொடங்கியதில் இருந்து உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் உயிர் வாழ போராடியதாக சூடானில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.
சூடான் நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நீடித்து வருகிறது. தொடர்ந்து ஆபரேஷன் காவிரி என்ற பெயரில் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் உட்பட 360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
நேற்று டெல்லி வந்த தமிழர்கள் 9 பேரில் ராஜசேகரன், தியா, கிருத்திகா, சோபியா, சந்தோஷ் குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேசிய அவர்கள், ‘எங்கு திரும்பினாலும் துப்பாக்கிச் சூடு, கலவரம் என சூடானின் நிலை மாறியுள்ளதாகவும், தாங்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வந்துள்ளதாகவும் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.
சூடானில் நிலமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தங்களது வீடு, உடமைகளை விட்டு விட்டு ஒரே ஒரு பையுடன் தாயகம் திரும்பியுள்ளதாகவும் நாடு திரும்பிய தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிலேயே அவர்கள் மீண்டும் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.