முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாளை வலுவடையும் புயல்! தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்குமா?

நாளை வலுவடையும் புயல்! தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்குமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu Weather Report | வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில் நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறை முகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.அந்தமானின் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாலை அதே பகுதியில் புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் தீவிரப் புயலாகவும், பின்னர் அதி தீவிரப் புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.தொடர்ந்து அது வடக்கு வடகிழக்கில் திசைமாறி, 14 ஆம் தேதி வங்கதேசம் மியான்மர் இடையே கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: சாதனை மாணவி நந்தினியை கவுரவித்த நியூஸ் 18 தமிழ்நாடு... கேக் வெட்டி கொண்டாட்டம்.. நெகிழ்ச்சி உரையாடல்..!

வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில் நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறை முகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், சென்னை, கடலூர், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், துத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

First published:

Tags: Bay of Bengal, Cyclone, Weather News in Tamil