முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை... வானிலை மையம் அலெர்ட்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை... வானிலை மையம் அலெர்ட்

மழை

மழை

Tamilnadu weather report | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும்.

24.03.2023 முதல் 26.03.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 27.03.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

top videos

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Tamilnadu, Weather News in Tamil