தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா குறித்த சுகாதாரத்துறை தினமும் பாதிப்பு நிலவரங்கள் குறித்து வெளியிட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு முழுவதும் 402 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 37 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஒரு உயிரிழப்பு இல்லை என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,032 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 363ஆக உயர்ந்துள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.