முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொளுத்தப்போகுது வெயில்.. அதிகபட்ச வெப்பநிலை நிலவும்... வானிலை மையத்தின் அலெர்ட்!

கொளுத்தப்போகுது வெயில்.. அதிகபட்ச வெப்பநிலை நிலவும்... வானிலை மையத்தின் அலெர்ட்!

வெயில்

வெயில்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 16 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 17 ஆம் தேதியன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை பொருத்தவரை, ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

Also Read : தமிழ் மொழி மீது இந்தியை திணிக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Summer, Summer Heat, Weather News in Tamil