முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பலத்த காற்றுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை... இன்றைய வானிலை அலெர்ட்

பலத்த காற்றுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை... இன்றைய வானிலை அலெர்ட்

மழை

மழை

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஏப்ரல் 29 -ம்) தேதி ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் 4 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

Also Read : 2024 நாடாளுமன்றத் தேர்தல்... கோவையில் கமல்ஹாசன் - அண்ணாமலை நேரடி போட்டியா?

மேலும் மே 1-ம் தேதி மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil