முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் கொடுத்த அலெர்ட்..!

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் கொடுத்த அலெர்ட்..!

மழை

மழை

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழையும் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! வானிலை அலெர்ட்

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவையில் ஒரு சில பகுதிகளிலும், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

top videos
    First published:

    Tags: Heavy Rainfall, Rain updates, Tamil Nadu, Tamil News, Weather News in Tamil