முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும்... வானிலை மையம் அலெர்ட்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும்... வானிலை மையம் அலெர்ட்

வெப்பம்

வெப்பம்

Tamil Nadu Weather Update : வெப்ப சலனம் காரணமாக ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2 நாட்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 6 மற்றும் ஜூன் 7 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பொருத்தவரை, ஜூன் 3 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read : ஒடிசா ரயில் விபத்து.. “கண்ணீர் கன்னம் தாண்டுகிறது..!” - கவிஞர் வைரமுத்து அஞ்சலி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Heat Wave, Rain Update, Summer Heat, Weather News in Tamil