முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா

கொரோனா

Corona Virus | தமிழகத்தில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 500-யைக் கடந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,759 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,01,701 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 329 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 136 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கோயம்புத்தூரில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

top videos

    கன்னியாகுமரியில் 52 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்து 3,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    First published:

    Tags: Corona