முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 150-யைக் கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 150-யைக் கடந்த கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு கடந்த ஒருவருடமாகத்தான் குறைந்து இருந்தது. தற்போது கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 3,766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,96,946 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 43 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும், கோயம்புத்தூரில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona