அரசின் நலத்திட்டங்களை பழங்குடியின மக்களுக்கு பெற்றுத் தருவதற்காக, ஆன்றோர் மன்றம் உருவாக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டிய இந்த குழுவின் பதவி காலம் கடந்த 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
அதன் பின்னர், உறுப்பினர் நியமனமின்றி 2 ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது. மேலும் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டிய கூட்டம், கடந்த 27 மாதங்களாக நடைபெறாததையும் நியூஸ் 18 தமிழ்நாடு சுட்டிக்காட்டியது.
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அளித்துள்ள விளக்கத்தில், பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து பழங்குடி பிரிவினரையும் உள்ளடக்கி 2 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையத்தைப் போல இந்த மன்றமும் சிறப்பாக செயல்படும் என உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Scheduled caste, TN Govt