மோக்கா புயலால் காற்றின் ஈரப்பதம் குறைந்தது கடல் காற்று தாமதமாக வீசுவது, ஈரப்பதமான மழை மேக கூட்டங்கள் இல்லாதது மேற்கில் இருந்து வீசும் வறண்ட காற்று போன்ற சூழலால் வெயிலின் தீவிரம் அதிகம் உணரப்படுவதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. கடந்த 2003-ஆம் ஆண்டு சென்னையில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதே போல, கடந்த 2014ஆம் ஆண்டு 109.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்திய நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
மேலும் வரும் நாட்களில் மாநிலத்தின் சில இடங்களில் வெப்பம் சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு அளவில் இருந்து 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Balachandran, Summer, Tamilnadu