நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள பாண்டியன் நுகர்வோர் பல்பொருள் அங்காடியில் ஆய்வு செய்த கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், புதிய ஜவுளி பிரிவினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நியாய விலை கடைகளில் நியாய விலை பொருட்கள் மட்டும்தான் விற்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார். அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Radhakrishnan, Ration Goods, Ration Shop