முகப்பு /செய்தி /தமிழ்நாடு / School Reopen : தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புது அறிவிப்பு!

School Reopen : தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புது அறிவிப்பு!

தனியார் பள்ளி மாணவிகள்

தனியார் பள்ளி மாணவிகள்

School Reopen | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பான புது அறிவிப்பு வெளியாகியுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் மாணவர்களின் கோடை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... School Reopen | 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? அதிரடியாக அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்..

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளும் அரசு அறிவித்துள்ளபடி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பனிரெண்டாம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 14-ஆம் தேதியும் தொடங்கும் என தனியார் பள்ளி சங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, Department of School Education, Private schools, School Reopen