முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் : தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் : தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கருணாநிதி பேனா சிலை

கருணாநிதி பேனா சிலை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.

பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக மற்றும் மீனவர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், மெரினா கடலில் பேனா சிலை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை அருகே மரங்களை நட வேண்டும் என்றும் தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவ சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட மனு விசாரணைக்காக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: DMK leader Karunanidhi, Supreme court, TN Govt