பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தஞ்சாவூர் - பழனி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்.
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரம் பார்வதி திருக்கல்யாணம், வள்ளிப்பிராட்டியின் அவதார தினம், சுவாமி ஐயப்பனின் அவதார தினம் எனப் பல்வேறு சிறப்புகளை உடையது பங்குனி உத்திர தினம்.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி 05.04.2023 மற்றும் 06.04.2022 ஆகிய இரண்டு தேதிகளில் தஞ்சாவூர்- பழனி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி தஞ்சாவூரிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரயிலானது பூடலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக மதியம் 1.30 மணிக்கு பழனி சென்றடையும்.
மறுமார்க்கம் பழனி-தஞ்சாவூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 06.15 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Palani Murugan Temple, Special trains, Tamil News, Tanjore