அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று மாலையே அறிவிக்க வாய்ப்புள்ளதால், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மணிசங்கர், ஸ்ரீராம் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். அதில், பொதுச்செயலாளார் தேர்தல் உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது எனவும் ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர்.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்கள் அனுப்பப்படுகிறது எனவும் ஓபிஎஸ் தரப்பினர் சுட்டிக்காட்டினர். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம் எனவும் குறிப்பிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் அடிப்படை உறுப்பினர் போட்டியிட முடியாது என்பதும், கட்சியில் 10 ஆண்டுகளும், தலைமை கழக நிர்வாகிகளாக 5 ஆண்டுகளும் இருப்பவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதும் புதுமையான விதி எனவும் கூறினர். வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை முடியும் என அறிவித்துள்ளதன் மூலம் 20 மாவட்ட செயலாளர்களை எப்படி சந்தித்து முன்மொழியவும், வழிமொழியவும் கோர முடியும் எனவும் ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது... தீர்ப்பு தேதியை அறிவித்த உயர்நீதிமன்றம்..!
மேலும், வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, OPS - EPS