கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியதால், வார இறுதி நாட்களில் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் சென்னை இடையேயான ஆம்னி பஸ் கட்டணம் வழக்கமாக 750 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை இருக்கும் என்ற நிலையில் வார இறுதி நாட்களில் 1,000 ரூபாய் முதல் 1,900 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கோவை மற்றும் மதுரை இடையேயான பேருந்து கட்டணமும் இருமடங்கு அதிகரித்து 1,200 ரூபாயாக உள்ளது. கோவை மற்றும் நெல்லை இடையே வழக்கமாக 700 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.
அது தற்போது, 1,530 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளில் 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
மதுரை - சென்னை இடையேயான தனியார் பேருந்துகளின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்து ரூ.1,300 முதல் ரூ.4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், ரயில்களில் பயணிப்பதை விட ஆம்னி பேருந்துகளில் வசதி அதிகமாக இருப்பதாகவும் சில பயணிகள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Omni Bus, School Reopen