முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கர்நாடகாவில் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்ட ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்

கர்நாடகாவில் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்ட ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடகா மாநிலத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் அ.தி.மு.க வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்குகியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதற்கிடையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் இருவரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட, கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடன் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று மட்டும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு- 2 பேர் உயிரிழப்பு

top videos

    எனினும் காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுடன் மனுத் தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும், ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Karnataka Election 2023