முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை..!

ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை..!

அமைச்ச்சர் நாசர்

அமைச்ச்சர் நாசர்

இதற்கு முன்பு 2 முறை திமுக அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையிலும், யாருடைய பதவியும் பறிக்கப்படவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 8 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்த இரண்டாண்டுகளில், தமிழக அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு வழங்கப்பட்டது.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

இந்நிலையில், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி நாசர் மீது சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த பதவி பறிப்பு நடந்துள்ளது. மேலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, இதுவரை 2 முறை திமுக அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையிலும், யாருடைய பதவி பறிக்கப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் தலைமையிலான  முதல்முறையாக அமைச்சர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: TN Cabinet