முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜூமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் அரசே நடத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

ஜூமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் அரசே நடத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

சீமான்

சீமான்

நிலம் வளம் என்னுடையதாக இருந்தாலும் வேலைவாய்ப்பு என்னுடையதாக இல்லை. இதை பேசினால் என்னை பாசிஸ்ட் என்கிறார்கள்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆட்டோ  ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தலைமையில், இன்று,  சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களைச் சந்திந்து பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2013ல் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடைபெற்றது. அதே மீட்டர் கட்டணத்திற்கு இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஆட்டோ ஓட்ட முடியும். ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று பிழைக்க வழியில்லை. வட இந்தியர்களை ஆதரித்து பேசுபவர்கள் எங்கள் ஆட்களையும் ஐயோ பாவம் என்று சொல்லுங்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,  "லிட்டருக்கு 103 ரூபாய் டீசல் பெட்ரோல் ஏறிய பிறகு அதே கட்டணத்திற்கு எங்களால் ஆட்டோ ஓட்ட முடியாது. டாஸ்மாக்கை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் இந்த அரசு ஜூமேட்டோ ஸ்விக்கி போன்ற நிறுவனங்களை அரசே நடத்தினால், முறைப்படுத்தினால் வருவாயும்பெருகும் நாட்டின் வளமும் பெருகும். 24 மணி நேரம் டாக்ஸி ஓட்டுவதை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சியில் அதிகாரமிருந்தால் ஒரு நொடியில் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து விடுவோம்" என்று தெரிவித்தார்.  

https://www.youtube.com/watch?v=pEX2I0UuumE

மேலும், தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் கொடுப்பது இருக்கட்டும் முதலில் சுங்கக் கட்டணத்தை நிறுத்த சொல்லுங்கள். வரி கட்டி எங்களால் வாழமுடியவில்லை. வேலைவாய்ப்பில் 80 சதவீதம் தமிழருக்கு கொடுங்கள் 20% யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

top videos

    நிலம் வளம் என்னுடையதாக இருந்தாலும் வேலைவாய்ப்பு என்னுடையதாக இல்லை. இதை பேசினால் என்னை பாசிஸ்ட் என்கிறார்கள். ஆம் நான் பாசிஸ்ட்தான். உரிமைக்கு பேசினால் பாஸிஸ்ட் என்றால் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    First published:

    Tags: Seeman