போக்சோ குற்ற வழக்கில் எந்த குற்றவாளியும் தப்பிக்க இயலாது என்ற அடிப்படையில் மிகுந்த அக்கறையுடன் விசாரணை நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ‘பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘தமிழ்நாடு முழுவதும் 32 மகளிர் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதிகள் தலைமையிலும் 33 கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள் குற்றவியல் நடுவர் தரத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதிபதி காலிப்பணியிடங்கள் இருந்தால் விரைந்து நிரப்பப்படும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார் .
தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருலலா, ‘குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டம் குறித்த விசாரணை நடத்த கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் இருப்பதாகவும் 14 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வழக்கு விசாரணை கால தாமதமாகும் போது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: POCSO case