முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

மழை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஓரிரு பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருபத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்.

Also Read : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மேலும், சென்னையைப் பொருத்தவரை ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Chennai, Rain updates, Weather News in Tamil