முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப் போகுது.. வானிலை அலெர்ட்..!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப் போகுது.. வானிலை அலெர்ட்..!

மழை

மழை

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.

இன்று மற்றும் நாளை (மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 2 முதல்  4 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read : கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் தொல்லை விவகாரம்... சீமான் கொந்தளிப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai Rain, Rain Update, Weather News in Tamil