வரவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காத்திநகர், கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவரை இதனை தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்கினர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது. இதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது.எனினும் காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுடன் மனுத் தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும் ஏற்கப்பட்டது.
இதையும் வாசிக்க: நாங்கள் தான் உண்மையான அதிமுக: கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம்- ஓ.பி.எஸ் அணியினர் திட்டவட்டம்
இந்நிலையில், காத்திநகர், கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka Election 2023, OPS