முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா... இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பார்களா?

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா... இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பார்களா?

அமித் ஷா

அமித் ஷா

வேலூர் பள்ளிகொண்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அமித் ஷா உரையாற்ற இருக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்

இன்று இரவு 8.45 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா ,இரவு 9:05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர் இரவு 9.45 மணியளவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.அமித்ஷா நாளை காலை 11.40 மணியளவில் வேளச்சேரியில் தென் சென்னை பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இதையும் படிங்க: அரசின் மெத்தனப் போக்கால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பின்னர் நாளை பகல் 1.45 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார். பகல் 2.45 மணிக்கு வேலூர் பள்ளிகொண்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா உரையாற்ற இருக்கிறார். பின்னர் மாலை 3.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம், சென்னை திரும்பும் அமித்ஷா, நாளை மாலை 5.50 மணிக்கு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.

இன்று சென்னை வரும் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அமித்ஷா, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசிக்கிறார். எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட காரணங்களால் சேலத்திலேயே இருப்பார் என்றும், அதனால் அவர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு குறைவு என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரம் சில நாட்களாக தேனியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பியுள்ளார். ஆனால் அவரும் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது

First published:

Tags: Amit Shah, BJP