புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி-யை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடக்கோரி, நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளதாகவும், CBI-க்கு மாற்றினால் தேவையான மனிதவளம் இல்லை எனத் தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, கல்வி அறிவால் ஏற்படும் விழிப்புணர்வால் மட்டுமே இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்தும், வழக்கின் தற்போதைய நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBCID, Madurai High Court