முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெயிலுக்கு லீவு... மழைக்கு வந்தது வேலை... வானிலை அலெர்ட்..!

தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெயிலுக்கு லீவு... மழைக்கு வந்தது வேலை... வானிலை அலெர்ட்..!

மழை

மழை

தமிழ்நாட்டில்15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் மற்றும் இன்று 15 மாவட்டங்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 2 ஆம் தேதியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்...? - சட்டமன்றத்தில் அமைச்சர் முக்கிய தகவல்..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai Rain, Heavy rain, Rain Update