ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்களிடம் மறைப்பதற்கும் எதுவும் இல்லை, பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். இன்று நடைபெற்ற சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்தச் சோதனை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பலதரப்பட்டவர்களின் ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் உத்தரவில்லாத துன்புறுத்தல்கள் எங்கள் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்டுவருகிறது. நம்பமுடியாத அளவுக்கு சவாலான காலமாக இருந்தாலும், இப்போது இந்தக் குற்றச்சாட்டுகளின் அதிகாரப்பூர்வத் தன்மையை மதிப்பீடு செய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளின் மீது எந்த உண்மையும் இல்லை என்பதை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
ஒரு நிறுவனமாக நாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதையும், எங்கள் பங்குதாரர்களுக்கு நேர்மையுடன் இருக்கவேண்டும் என்பதையும் நம்புகிறோம். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை மற்றும் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று உங்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜி ஸ்கொயர் விவகாரம்.. தி.மு.க எம்எல்ஏ வீட்டில் சோதனை... சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.